மாநில மொழிப் பத்திரிகைகளில் "தினத்தந்தி" முதலிடம்

மாநில மொழி பத்திரிகைகளில், இந்தியாவில் தினத்தந்தி தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. தினத்தந்தி வாசகர்களின் எண்ணிக்கை, இரண்டரை கோடியை எட்டி உள்ளது.
x
தினசரி பத்திரிகைகளின் வாசகர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தும் எம்.ஆர்.யு.சி நிறுவனம் நடப்பாண்டில் இரண்டாம் காலாண்டிற்கான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அதிக வாசகர்கள் படிக்கும் முதல் 5 பத்திரிகைகளில், தென்மாநிலங்களை பொறுத்தவரை தினத்தந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது. கடந்த முறை தினத்தந்தியின் வாசகர்களின் எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சத்து 54 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது 2 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, இந்தி அல்லாத பிறமொழிப் பத்திரிகைகளில் முதலிடம் ஆகும்.

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் தினத்தந்தியை தவிர வேறு எந்த பத்திரிகையும் அகில இந்திய அளவில் முதல் பத்து இடத்திற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இண்டர்நெட் வாசகர்கள் எண்ணிக்கையிலும் தினத்தந்தி முதலிடத்தில் இருக்கிறது. இண்டர்நெட்டில் தினத்தந்தியை 44 லட்சத்து 24 ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது....

Next Story

மேலும் செய்திகள்