ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டுள்ளது.
ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக மீட்டுள்ளது. அங்குள்ள நல்லாண்டவர் கோவில் மற்றும் குமாரவாடி மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்திருந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், நல்லாண்டவர் கோவில் செயல் அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை மீண்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்