சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார்.
சுதந்திர தினத்தன்று பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் - காமராஜர் சிலையிடம் மனு அளித்த குமரி ஆனந்தன்
x
சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிச்சாமி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விருதுநகரில், காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள காமராஜர் சிலையிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மனு அளித்தார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய குமரி ஆனந்தன், அவரது சிலையிடம் இந்த மனுவை அளித்தார். மேலும், மனுவில் அண்ணா பிறந்த நாளன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 36 மசோதாக்களை கொண்டு வந்த பிரதமர் மோடி, 37வது மசோதாவாக பூரண மது ஒழிப்பை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்