தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 25 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மிகச்சிந்த மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு கடந்த 2012 முதல் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதேபோல் சிறந்த 3 நகராட்சிகளுக்கு தலா 15 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய் மற்றும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த பரிசுகளை சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் பழனிசாமி வழங்க உள்ளார்.
Next Story

