இரவில் இருசக்கர வாகன வேட்டை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திருவல்லிக்கேணியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
x
திருவல்லிக்கேணியில் இரவு நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி நியமதுல்லா தெருவை சேர்ந்தவர் சசிகுமார். கடந்த 8 ம் தேதி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கரவாகனம், திடீரென மாயமானது. இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 2 இளைஞர்கள் இருசக்கரவாகனத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, ஜாம்பவான் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்