ராகுல் காந்தியே தலைவராக தொடர வேண்டும் - காங்கிரஸ் நிர்வாகிகள்

ராகுல்காந்தியே தலைவராக தொடரவேண்டும் என காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
x
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ்  தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்த நடந்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  முன்னதாக, இந்த கூட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்ற சோனியா காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருப்பதாகவும்,  ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்த தாமும், ராகுல் காந்தியும் அந்த கூட்டத்தில் இருக்க தேவையில்லை என்பதால் வெளியே வந்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து, இருவரும் இல்லம் திரும்பினர். இந்நிலையில் ராகுல்காந்தியே தலைவராக தொடரவேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்