ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணம் - கோவில் நடை அடைப்பு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணத்தை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணம் - கோவில் நடை அடைப்பு
x
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணத்தை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆடித் திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும் நிலையில், காலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் பர்வதவர்த்தனி காலை 7 மணிக்கு தவக்கோலத்தில் எழுந்தருளி மண்டபத்திற்கு புறப்பட்டதால் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட முடியாமலும், சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்