கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவையொட்டி வில்வித்தை போட்டி நடைபெற்றது. வல்வில் ஓரி மன்னன் வில் ஆற்றலை போற்றும் வகையில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 400க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தப் போட்டியை மலைவாழ்மக்கள், சுற்றுலாப்பயணிகள் என ஏராளமானனோர் கண்டு களித்தனர்.
Next Story