நாமக்கல் : பட்டா வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்...

நாமக்கல் மாவட்டம் பவானியில் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் : பட்டா வழங்கக் கோரி முற்றுகை போராட்டம்...
x
நாமக்கல் மாவட்டம் பவானியில் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளுவர் நகர் பகுதியில்  கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து  பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்