மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் கைது

மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது.
x
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வந்த சரக்கு கப்பல் மூலம் தப்பிக்க முயன்ற முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை, நடுக்கடலில் இந்திய உளவுத்துறை கைது செய்துள்ளது. மாலத்தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லா, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் தூத்துக்குடி சரக்கு கப்பல் மூலம் தப்பி செல்வதாக உளவுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நடுக்கடலில் சரக்கு கப்ப​​லை சுற்றி வளைத்த இந்திய உளவுத்துறை, முன்னாள் துணை அதிபர் அகமது அஜிப் அப்துல்லாவை கைது செய்தது. 
 


Next Story

மேலும் செய்திகள்