நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் கொலையான வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட மூவர் கொலையான வழக்கை, சி.பி.சி.ஐ.டி போலீசார் கையில் எடுத்துள்ளனர். டி.ஜி.பி.திரிபாதி உத்தரவைத் தொடர்ந்து சிபிசிஐடி எஸ்.பி. விஜயகுமார் தலைமையிலான குழு, கொல்லப்பட்ட உமா மகேஷ்வரியின் இல்லத்தில் ஆய்வு செய்தது. தடயங்களை சேகரித்த அவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகேயனின் தாய் சீனியம்மாளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி பெற உள்ளனர்.
Next Story