அண்ணா நினைவு நாளன்று கோவில்களில் அன்னதானம் : தடை கோரிய வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளன்று, இந்து கோவில்களில் அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அண்ணா நினைவு நாளன்று கோவில்களில் அன்னதானம் : தடை கோரிய வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு
x
தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு  நாளன்று, இந்து கோவில்களில், கோவில் பணத்தைக் கொண்டு சிறப்பு அன்னதானம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும், இலவச வேட்டி ,சேலைகளும் வழங்கக்கூடாது என உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்