கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து

சென்னை கோயம்பேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 ஆம்னி பேருந்துக்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
x
சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த 2  ஆம்னி பேருந்துகளுக்கும் பரவியது. இதனால் 3 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்