சூலூர் அருகே பயங்கர விபத்து - 5 பேர் பலி

கோவை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
x
கோவை அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் முகமது பஷீர். கட்டுமான ஒப்பந்ததாரரான இவரும், இவருடன் பணியாற்றி வந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெண் உள்பட 4 பேரும் கன்னியாகுமரிக்கு, காரில் சுற்றுலா சென்றுள்ளனர். சூலூர் அருகே வெள்ளலூர் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், மற்ற 3 பேர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அதிகாலை நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்