நெல்லை படுகொலை : "அதிர்ச்சி அளிக்கிறது" - வைகோ
நெல்லையில், முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக, வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லையில், முன்னாள் மேயர் உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக, வைகோ தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்தக் கொலைகள், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக் காலங்களில், தமிழகத்தில் படுகொலைகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக கவலை தெரிவித்துள்ள வைகோ, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிக்கையொன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story