நெல்லை 3 பேர் கொலை சம்பவம் : "குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்" - மாநகர காவல் ஆணையர் உறுதி

நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை 3 பேர் கொலை சம்பவம் : குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் - மாநகர காவல் ஆணையர் உறுதி
x
நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, கொலை சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மாநகர காவல் ஆணையர் பாஸ்கரன், ஆதாயத்திற்காக இந்த கொலை நடந்துள்ளதாக கூறினார். இது குறித்து துணை ஆணையர் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார். இந்நிலையில், கொலை, நகை மற்றும் பணம் காணாமல் போனது என 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உமாமகேஸ்வரியின் அண்ணன் மகன் பிரபு மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 50 பேரிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்