"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தியுள்ள அவர், அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மழை நீர் சேமிப்பை அரசு மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பது நிரந்தர தீர்வாகும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் அனைவரும் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அமைச்சர் வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்