சீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
சீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்
x
சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அப்பகுதியில் ஒருபிரிவு மீனவர்கள் தடை செய்யப்பட்ட சீன என்ஜின்களை மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதாக, மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பழையாறு துறைமுகத்தில், சீன என்ஜின் பொருத்திய விசைப்படகு மோதி, சிறிய வகை படகுகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருபிரிவு மீனவர்களுடன் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தையை புறக்கணித்து விசைப்படகு மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்