மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் : குடும்பத்தை சீர் குலைத்த துபாய் நட்பு

கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் : குடும்பத்தை சீர் குலைத்த துபாய் நட்பு
x
கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், இவரது மனைவி சாந்தி இரண்டு குழந்தைகளுடன் பொன்பரப்பியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இளையராஜா துபாயில் தன்னோடு வேலை செய்த சூளகிரியை சேர்ந்த சேட்டு என்பவர் சொந்த ஊர் திரும்பியபோது, தனது மனைவிக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அவற்றை கொடுக்க வந்த இடத்தில் சேட்டுவிற்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சாந்தி, தனது பிள்ளைகளை விட்டு விட்டு சேட்டுவுடன் சூளகிரிக்கு வந்து சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். 

இதனையறிந்து துபாயில் இருந்து வந்த இளையராஜா, சூளகிரி சென்று சாந்தியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, சாந்தியின் தலையை சுத்தியலால் தாக்கி, கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் பொன்பரப்பி கிராமத்தில் இளையராஜாவை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்