தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின், பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
x
கும்பகோணத்தில் பரவலாக நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. 

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடியில்  தொடர்ந்து  இரண்டு  மணி  நேரமாக  கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், தலைவிரித்து ஆடிய குடிநீர் பிரச்சினை, கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் ஓரளவிற்கு தீர்ந்தது.  

நாகை மாவட்டத்தில் பரவாக கன மழை பெய்தது. நாகூர், கீழ்வேளூர், தேவூர் சிக்கல் ,ஆழியூர் குருக்கத்தி, திருக்குவளை, சாட்டியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடந்து 4ம் நாளாக இடியுடன் கன மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்