தங்கத்தை கைக்கடிகாரத்தின் மூடியாக மாற்றி கடத்தி சிக்கிய மலேசிய நபர்...

தங்கத்தை கைக்கடிகார‌த்தின் பின்பக்க மூடியாக மாற்றி கடத்த முயன்ற மலேசிய நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார்.
x
தங்கத்தை கைக்கடிகார‌த்தின் பின்பக்க மூடியாக மாற்றி, கடத்த முயன்ற மலேசிய நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த அஜ்மல்கான் என்ற பயணி, ஏராளமான கைக்கடிகாரங்களை கொண்டுவந்துள்ளார். அவர்மீது சந்தேகமடைந்த வான் நுண்ணறிவு போலீசார்,  கைக்கடிகாரங்களை ஆய்வு செய்த‌ போது, தங்கத்தை கைக்கடிகாரத்தின் பின்பக்க மூடியாக மாற்றி, அதை குரோமியம் பூசி மறைத்து கடத்தி வந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து 23 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த நுண்ணறிவு போலீசார் அஜ்மல் கானை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்