நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற விவசாயிகள், இயற்கை முறையில் விளைந்த விவசாய பயிர்களையும் உடன் கொண்டு வந்திருந்தனர். இதனைதொடர்ந்து விவசாயிகள், படுகரின மக்களின் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர். அதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
Next Story