பெரம்பலூரில் குடிநீர், மின்சாரம் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்...

பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராம மக்களின் திடீர் போராட்டத்தால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெரம்பலூரில் குடிநீர், மின்சாரம் வேண்டி பொதுமக்கள் சாலை மறியல்...
x
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராம மக்களின் திடீர் போராட்டத்தால், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகிப்பட்டு வந்த நிலையில், டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. மேலும் ஊரில் உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்