கும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
x
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.  கும்பகோணத்தில் ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு வருடமும் ஜூலை 16ஆம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்