திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்

வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தனது முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரசாரத்தின் போது அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,  கடந்த முறை திமுகவால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்றும், அதனால் தான் இந்த தொகுதி மக்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் தெரிவித்தார். இந்த முறை பணப்பிரச்சினை செய்து தேர்தலை நிறுத்தாமல், சாதனைகளை சொல்லி திமுகவினர் ஓட்டு கேட்க வேண்டும் எனவும் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்