தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது

தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு... கோவையை சேர்ந்த 3 பேர் கைது
x
சமூக வலைதளங்கள் மூலம் தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  கரும்பு கடை, பீளமேடு, உக்கடம் ஆகிய 3 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். கரும்புகடை பகுதியில் ஆட்டோ பைசல் என்பவரது வீட்டிலும், உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் சதாம் உசேன் என்பவரது வீட்டிலும், பீளமேடு பகுதியில் முகம்மது புர்கான் என்பவரது வீட்டிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தப்பட்டது.  

பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆட்டோ பைசலும், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கொலை வழக்கில் சதாம் உசேனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்