உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம் - துரைமுருகன்
இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் தி.மு.கவின் உணர்வை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியதாக கூறி, அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தில் தி.மு.கவின் உணர்வை கொச்சைப்படுத்தி முதலமைச்சர் பேசியதாக கூறி, அக்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், எல்லா துறைகளிலும் இந்தியை திணிக்க மத்திய அரசு அதிதீவிரமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர வலியுறுத்திய போது, முதலமைச்சர் தி.மு.கவினர் உணர்வை கொச்சைப்படுத்தி பேசியதாக அவர் கூறினார்.
Next Story