சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது - வெங்கையா நாயுடு

சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
x
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தனது பேச்சை தமிழில் தொடங்கினார். சென்னை வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த அவர், சுகாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்