குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
அரசு தொடங்கியுள்ள எல்.கே.ஜி. வகுப்புகளில் குழந்தைகள் ஆங்கிலத்தை சரளமாக கற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் மாணவர்களை அதிகமாக சேர்க்கும் வகையில், தனியார் பள்ளிகளில் இருக்கும் சீருடைகள் போன்று அழகிய சீருடை வழங்கப்படும் என தெரிவித்தார். ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளில் கழிவறை வசதி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் பல கோச்சிங் சென்டர்களாக மாற்றப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்