தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்

தூத்துக்குடியில் குடிபோதையில் மனைவியை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி : உணவு தர மறுத்த மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன்
x
தூத்துக்குடி ராஜபாளையம் நகரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாக்கியமுத்து. குடிபோதைக்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் இருந்த அவருக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவு மதுபோதையில் வந்த பாக்கியமுத்து அவரின் மனைவியிடம் உணவு கேட்டுள்ளார். வேலைக்கு செல்லாமல் மதுகுடித்து வருவதால் உணவு தர மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பாக்கியமுத்து வீட்டில் இருந்த கட்டையால் மனைவியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாக்கியமுத்துவை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்