புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்

புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார்.
புதிய திட்டங்களுக்கு மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் - டி.கே.ரங்கராஜன்
x
புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒப்புதலை பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பங்கேற்க வந்த டி.கே. ரங்கராஜன் இதனை தெரிவித்தார்.தஞ்சையில் சி.ஐ.டி.யு. 14 வது மாநில மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு தொழிலாளர்களின் செங்கொடி அணிவகுப்பு பேரணி நேற்று நடைபெற்றது. தஞ்சையில் உள்ள சிவகங்கை பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்