நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, தமது மகள் திருமணத்துக்காக, விரைவில் பரோலில் வருவார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
நளினிக்கு ஒரு மாதம் பரோல் : மகள் திருமணத்துக்காக வெளியே வருகிறார்
x
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர், மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். மனு மீதான விசாரணை முதலில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவும், கடந்த 5 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்திலும் நடந்து முடிந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 1 மாத கால பரோல் வழங்கி தீர்ப்பளித்தனர். இந்நிலையில், வேலூர் மத்திய பெண்கள் சிறையில் இருக்கும் நளினியை அவரது வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்தார். பின்னர், தந்திடிவிக்கு அவர் அளித்த பேட்டியில், 4 நாட்களில், நளினி பரோலில் வெளிவருவார் என்றார். நளினியின் கணவர் முருகன் பரோலில் வர விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த திருமணம் தமிழகம் அல்லது இலங்கையில் நடைபெறும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்