வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ 20,000 சுருட்டல்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, வங்கி அதிகாரி போல் பேசி, விவசாயி ஒருவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ஆர். சி. செட்டியப்பட்டி  பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் என்பவர், பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனியார் வங்கியில், கணக்கு தொடங்கி, அதில் பால் ஊற்றிய பணத்தை சேமித்து வருகிறார். இவரது வங்கிக்கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் சேர்ந்திருந்த நிலையில், செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர், ஏ.டி.எம் கார்டு முடக்கப்பட்டதாக கூறி,ரகசிய எண்ணை கேட்டுள்ளார். விவசாயி பிரான்சிஸ் சேவியர்  படிக்காதவர் என்பதால் வங்கி அதிகாரி கேட்பதாக நினைத்து, அனைத்தையும் கூறியுள்ளார். உடனே இவரின் வங்கி கணக்கில் இருந்த 20 ஆயிரம் பணம் திருடப்பட்டது. இது குறித்து புகார் அளித்தும் வங்கி அதிகாரிகள், சரியாக பதில் அளிக்கவில்லை என்று, விவசாயி ஃபிரான்சிஸ் புகார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்