ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் : 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு
பரமத்திவேலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பரமத்திவேலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டனர். வேலூர் நான்கு ரோட்டில் தொடங்கிய பேரணி பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளி சாலை வழியாக சென்று நிறைவடைந்தது. பேரணியின் போது தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுகளுக்கு காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
Next Story