காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். ஆவுடைப்பொய்கை பகுதியில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற காரும், காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை சென்ற சரக்கு லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்