கோயம்பேடு பகுதியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆந்திராவை சேர்ந்த பயணியிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோயம்பேடு பகுதியில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்
x
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஆந்திராவை சேர்ந்த பயணியிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலைய 4-வது நடைமேடை பகுதியில் கையில் சூட்கேசுடன், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் நின்றுள்ளார். அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் 7 கிலோ கஞ்சா இருந்துள்ளது. பின்னர் விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்த தேமுடு என்பதும், சேலத்திற்கு கஞ்சாவை பேருந்து மூலம் கடத்த முயன்றபோது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்