ஜோலார்பேட்டை : பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறி

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி, 2 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை : பெட்ரோல் பங்க் உரிமையாளரை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறி
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளரை தாக்கி, 2 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை ரோடு பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவரின் மகன், சிவகுமார், பெட்ரோல் பங்கில் வசூலான பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் 3 பேர், பின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு, பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்