வறட்சியை தாங்கி வளரும் தென்னை ரகம் - வேளாண் விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில் "திருவையாறு தென்னை 3 ரகம்" என்ற புதிய வகை தென்னை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில் "திருவையாறு தென்னை 3 ரகம்" என்ற புதிய வகை தென்னை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை தென்னை குறைந்த நீரில் அதிக மகசூல் கொடுப்பதுடன், வறட்சியை தாங்கி வளரும் என்று வேளாண் விஞ்ஞானி செல்வம் தெரிவித்துள்ளார். குறைந்த உயரத்தில் வளரக்கூடிய இந்த வகை தென்னை இரண்டரை ஆண்டுகளில் பலன் தரக்கூடியது எனவும் அவர் கூறினார்.
Next Story