மாநிலங்களவை தேர்தல் - வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் ​தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
x
தமிழகம் சார்பில் மாநிலங்களவைக்கு 6 எம்பிக்களை தேர்வு செய்ய வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக சார்பில் தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன்  போட்டியிடுகின்றனர். இதேபோல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்  போட்டியிடுகிறார். இந்நிலையில் முதலாவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவரும் தங்கள்  வேட்பு மனுக்களை  தாக்கல் செய்தனர். 

வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல் - பத்திரிகையாளர் ப்ரியன் கருத்து


வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல் - பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து
      


Next Story

மேலும் செய்திகள்