திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, திருச்சி வந்த விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, திருச்சியை சேர்ந்த வினோத் குமார், சரவணகுமார் மற்றும் ஜபருல்லா ஆகியோர், 600 கிராம் எடை கொண்ட 20 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story