11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்

11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
x
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்ததாக, பன்னீர்செல்வம் உள்ளிட்ட  11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்  ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.  இதேபோல்  சபாநாயகர் நோட்டீசை எதிர்த்து பிரபு உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த இரண்டு வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு  நடைபெற்றது. அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறினார். ஆனால், 3 எம்.எல்.ஏ.கள் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மற்றும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு வழக்குகளும் வேறு வேறு தன்மை கொண்டது என்று வாதிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை  வரும் 30ஆம் ​தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இண்டு வழக்குகளும் அதே நாளில் தனித்தனியாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்