ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு : மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்

கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில், 3 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு : மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்
x
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில், 3 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை சிறையில் உள்ள கண்ணன் என்ற செந்தில், ரீனா ஸோஷ்பின் மேரி ஆகிய இருவரும் வீடியோ கான்பிரசிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேபோல ஜாமீனில் இருக்கும் நீலமேகம், நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜரானார். ரஞ்சித் என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, வரும் 16 ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்