பூந்தமல்லி : கடைக்குள் புகுந்து கவிழ்ந்த லாரி
பூந்தமல்லி அருகே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.
பூந்தமல்லி அருகே வேகமாக வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது. அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் இதை கண்டதும், அங்கு அடிபட்டு கிடந்த லாரி ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். விசாரணையில், லாரி ஓட்டி வந்த வெங்கடேசன் தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டி வந்து கடையில் மோதியது தெரிய வந்தது.
Next Story