ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவருக்கு பத்தாயிரம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்

விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத அமாவாசையை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.
ஆஞ்சநேயர் கோயிலில் உற்சவருக்கு பத்தாயிரம் பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம்
x
கும்பகோணத்தில் பாலக்கரையில் அமைந்துள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத அமாவாசையை ஒட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பூவன் பழம், ரஸ்தாளி, செவ்வாழை, கற்பூரவள்ளி உள்ளிட்ட 10 வகையான வாழை பழங்கள் என பத்து ஆயிரம்  பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்