"அறிவு சார் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும்" - மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், அறிவு சார் சொத்துரிமை குறித்து தேசிய அளவிலான பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.
அறிவு சார் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்
x
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில், அறிவு சார் சொத்துரிமை குறித்து தேசிய அளவிலான பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய மயில்சாமி அண்ணாதுரை, திருவள்ளுவர் காப்பிரைட் கேட்டதில்லை என்று கூறினார். அவர் கேட்டிருந்தால் எவ்வளவோ பெற்றிருக்க முடியும் என்றும், வள்ளுவர் போல் இல்லாமல் நமது அறிவு சார் சொத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என்று மயில்சாமி அண்ணாதுரை கேட்டு கொண்டார். இதிகாசங்களை தாண்டி இந்தியாவின் முகவரி அறிவுசார் சொத்து உரிமையின் காரணமாக விவசாயம் முதல் விண்வெளி வரை வெளி உலகிற்கு தெரிய வருவதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்