முதல்வருடன் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைச்செயலாளர் சண்முகம் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகம் இன்று சந்தித்து பேசினார்.
x
சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெற்றது. புதிய தலைமை செயலாளராக சண்முகம் நாளை பதவியேற்க உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக தெரிகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு அறிவிக்கவுள்ள பல்வேறு திட்டங்கள், மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்தும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்