முசிறி : இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை

திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது.
முசிறி : இலவச லேப்டாப் கேட்டு முற்றுகை
x
திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. 35 பள்ளிகளை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் 4 ஆயிரத்து 195 பேருக்கு லேப்டாப் வழங்கும் பணிகளை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் தொடக்கி வைத்தார். விழா முடிந்து பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்த எம்எல்ஏ செல்வராஜிடம் 2017 -18 மற்றும் 2018 -19 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்த முன்னாள் மாணவ மாணவிகள் தங்களுக்கும் அரசின் இலவச லேப்டாப் வழங்க வேண்டும் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை எம்எல்ஏ சமாதானப்படுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்