கி.வீரமணியை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
கி.வீரமணியை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்
x
சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரமணி, முரசொலி அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அவரது முதல் நினைவு நாளில் திறக்கப்பட உள்ளதாக கூறினார். இதனை, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளதாகவும், இதில் கலந்து கொள்ள ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் போதாது என்றும் கி.வீரமணி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்