கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
கொடைக்கானலில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்...
x
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு பதுங்கி ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 மாவோயிஸ்ட்டுகளை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்களில் இருவர் ஜாமீனில் வெளியே உள்ளனர். திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழிக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்ட நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதற்காக சிறையில் உள்ள 5 பேர் உட்பட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். வழக்கை ஜுலை மாதம் இரண்டாம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்