ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் காலம் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு, 5வது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
கடந்த 2017, செப்டம்பர் மாதம் முதல் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த ஆணையத்தின் கால அவகாசம் 4 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 மாதம், கால அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனிடையே, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு எதிராக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, வரும் 1ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்